Description
உயிரை நோக்கிஉங்களுடன்…!
ஹரி ஓம்!
வணக்கம் வாசகர்களே!
இந்த “உயிரை நோக்கி….” என்ற நூல் “ஒளிரும் உண்மைகள் வெளியீடு 6 ஆக வெளிவருகிறது.உலகம் ‘ஆத்மா’ என்றால் என்ன? என்று ஒருமித்துக் கேட்கும் கேள்வி, அனைவரின் காதுகளில் விழுகிறது. வெளியுலக வாழ்வின் சலிப்பும் அன்பிற்கான ஏக்கமும் வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வியும் இன்று எல்லோரது கேள்வியாகவும் இந்தப் பூமிப் பந்தில் ஒலிக்கிறது. விஞ்ஞானம் ‘உயிர்’ என்பதை பௌதீக, வேதியியல் கொள்கைகளால் விளக்க முடியாமல் சறுக்குகின்றது.
ஆதி சங்கரர் அத்வைதக் கொள்கையை நிலைநாட்டிய பொழுது ‘உயிரென்பது ஆத்மாவே’ என்று விளக்கமளித்தார். ஆத்மா என்ன என்பதையும் ‘ஆத்ம போதமாகப் போதித்தார். எமது பயிலரங்கில் போதித்த ஆத்ம போத விளக்கத்தையே இங்கு ‘உயிரை நோக்கி…’என்ற தலைப்பில் வெளியிடுகிறோம். ‘குருபூர்ணிமா’ வில்வெளியிடுவது சிறப்பு.
எமது உபதேசங்களை எழுத்து வடிவில் செய்துள்ள எனது மாணவியான விஜயா, அச்சு வடிவில் செல்வா கிருபா, புத்தக வடிவில் ஹ்ருதயா ஆகியோர் ஆசீர்வாதம் பெற்றவர்கள்.
ஓம் தத் சத்
ஸ்வாமி பரமாத்மானந்தா
கனடா – யோக வேதாந்த நிறுவனம்
ஜூலை 2008
There are no reviews yet.